முருகன் பாடல்கள் [Murugan Songs]

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக் கால்
எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆறிரு தடந்தோள் வாழ்க!
     அறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க!
     குக்குடம் வாழ்க! செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க!
     யானைதன் அணங்கும் வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க!
     வாழ்கசீர் அடியார் எல்லாம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாள்என் செயும் வினைதான் என்
     செயும் எனை நாடி வந்த
கோள்என் செயும் கொடுங் கூற்றென்
     செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும்
     தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு
     முன்னே வந்து தோன்றிடினே!